Saturday, June 18, 2022

25 கதைகள்

 25 கதைகள்

மாணவர்களின் எழுத்து




   அனைத்து வகை மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கவும், அவர்களின் படைப்பாற்றலைக் கண்டறிந்து வெளிப்படுத்தவும் , இளம் வாசகர் வட்டம் என்னும் செயல்பாட்டை சென்ற வருடம் டிசம்பர் மாதம் பள்ளிக் கல்வித்துறை கொண்டுவந்தது.  நூலகத்திற்கென ஒரு பாடவேளையும் ஒதுக்கப்பட்டது. பள்ளி நூலகங்கள் பயன்பாட்டுக்கு வந்தன.  வாரந்தோறும் பள்ளி அளவில், கல்வி மாவட்ட அளவில், மாவட்ட அளவில், தமிழக அளவில் போட்டிகள் நடந்தன.

        புத்தகம் குறித்து ஓவியம் வரையவோ, கட்டுரை எழுதவோ, விமர்சனம் செய்யவோ, கவிதை, சிறுகதை, நாடகம் எழுதவோ ஒவ்வொரு மாணவனையும் ஊக்கவித்தது, இந்த “இளம் வாசகர் வட்டம்”.

    எங்கள் பள்ளியில் மிகச் சிறப்பாகத் தொடங்கப்பட்ட “இளம் வாசகர் வட்டத்தில்” ஏறத்தாழ 1000 புத்தகங்கள் மேல் மாணவர்களால் வாசிக்கப்பட்டன. ஏறத்தாழ 500 புத்தகங்கள், “வாசிப்பு ஏடு” என்னும் ஏட்டில் எழுதப்பட்டு, பெற்றோர்களால், ஆசிரியர்களால் பார்வையிடப்பட்டன. பரிசுகளும் தரப்பட்டன. 

  மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கும்வண்ணம், குழந்தைச் செயற்பாட்டாளர் இனியன் அவர்கள், மாணவர்களுடன் ஒரு மாலைப்பொழுதை ரம்மியமாக்கிச் சென்றது ஒரு தனி கதை.

        நூலகத்தைப் பயன்படுத்துதல் - வாசித்தல் - எழுதுதல் - நன்னடத்தை பேணுதல் என்கிற அம்சத்தில் கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேனிலைப்பள்ளியில் தொடங்கப்பட்ட இளம் வாசகர் வட்டம் மன்றத்தில் பள்ளிக் குழந்தைகள் எழுதிய படைப்புகளில் தேர்ந்தெடுத்த படைப்புகளின் தொகுதி இது.

    ஒருவேளை பள்ளிக்கல்வித்துறை இளம் வாசகர் வட்டம் என்கிற நூலகச் செயல்பாட்டைத் தொடங்காமல் இருந்திருந்தால், இந்தக் கதாப்புத்தகம் வந்திருக்காது. இத்தொகுதி வரப் பள்ளிக் கல்வித்துறையே காரணம். நன்றி!

    இக்கதைகளை ஒரு சேர வாசிக்கும்போது படைப்புகள் யாவும் ஒரு முழுமையை நோக்கிய பயணம் என்றே தோன்றுகிறது. இக்கதைகளில் ஒரு வெகுளித்தனம் வெளிப்படுவதை உணரமுடிகிறது. சிறிய குழந்தைகளின் படைப்புகளைத் தொகுத்து அவர்களிடம் காட்டும்போது, அவர்கள் முதிர்ந்த எழுத்தாளர்களாகிவிடுகிறார்கள். இது எல்லா அரசுப் பள்ளிகளிகளிலும் நடக்கவேண்டும். நடந்தால் அது மாபெரும் சாதனை.

        இங்கே எழுதியிருக்கும் குட்டி எழுத்தாளர்கள் படைப்பின் மணலில் அ என்ற எழுத்தை எழுதிப்பார்த்திருக்கிறார். எழுத்து முழுமையடைந்தும் அடையாமலும் இருக்கிறது. படைப்பின் உண்மையான தன்மை இதுதான். என் பிள்ளைகள் , இல்லை, நம் அரசுப் பள்ளி மாணவர்கள் முழுமையை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. அதற்குச் சாட்சிதான் இத்தொகுதி.


    கீழே காணும் படத்தினைச் சொடுக்கிக் கதாபுத்தகத்தை இலவசமாகத் தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.



        தமிழக அரசுப் பள்ளி மாணவர்களின் கதைகள் முதன்முறையாக ஒரு தொகுதியாக, எங்கள் பள்ளி மாணவர்களின் 25 கதைகள் வெளிவந்திருப்பின் அதற்குக் காரணம் பள்ளிக்கல்வித்துறையே.

            தவிரவும் “25 கதைகள்” கிண்டில் வெர்ஷனில் வரவும் மாணவர்களும் நானும் விரும்பினேன். அதற்காக வடிவமைத்துக் கொடுத்தவர் அழிசி பதிப்பகத்தார் திரு ஸ்ரீநிவாஸ கோபாலன் அவர்கள். அவருக்கு நன்றி. தமிழ்நாட்டில் முதன்முறையாக ஓர் அரசுப் பள்ளிமாணவர்களின் கதைகள் கிண்டில் வெர்ஷனில் வந்திருப்பதற்கு முதன் காரணம் பள்ளிக்கல்வித்துறையே. அவர்களுக்கு நன்றி!

    கீழே காணும் இணைப்பைச்சொடுக்கி வாசிக்கலாம்.

        


            

flip book வடிவில் வாசிக்க கீழே இருக்கும் படத்தைச் சொடுக்கி வாசிக்கவும்.




இப்படிக்கு,

ரா.தாமோதரன்,
இளம் வாசகர் வட்டம்
பொறுப்பாளர்

நெ.ஷ்யாம்சுந்தர்
இளம் வாசகர் வட்டம்
தலைவர்

சா.ஹரிணி
இளம் வாசகர் வட்டம்
செயலர்

அறிஞர்  அண்ணா அரசு மேனிலைப்பள்ளி
கும்பகோணம்

நன்றியுடன்

தலைமையாசிரியர் திரு வை.சாரதி
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்


உலகப்புத்தகத் தின விழா

இன்று  உலகப்புத்தகத் தினவிழா 2025, நம் பள்ளி குமரசாமி நினைவு நூலகத்தில் நடைபெறுகிறது. ஆசிரியர், மாணவர்கள்  தங்கள் படைப்புகளை (எழுத்து, காணொல...