எங்கள் பள்ளி மாணவர்கள், இளம் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் எழுதிய கதைகள், என் கனவின் கதை என்ற பெயரில் வெளியானது. தற்போது, வி.ஆர்.தேவிகா மற்றும் லதா ராமகிருஷ்ணன் ஆகியோர் மொழிபெயர்ப்பில், MY DREAM STORY என்ற பெயரில் மின் புத்தகமாக, மைசூரில் வெளியிடப்பட்டது.
நாளை இம் மின்னூல் புத்தக வடிவில் வெளியிடப்படுகிறது. இப்புத்தகத்தை வெளியிட, பால புரஸ்கார் விருது பெற்ற சிறார் எழுத்தாளர் திரு. யெஸ். பாலபாரதி வருகிறார். அவரின் புதிய புத்தகமான ஆளுக்குப் பாதி என்ற சிறார் கதைகளையும் வெளியிட்டு, சிறார்களும் கதைகளும் என்ற தலைப்பில் பேச உள்ளார்.
No comments:
Post a Comment