Monday, April 21, 2025

வாண்டு மாமா நூற்றாண்டு விழா

இன்று மாலை, வாண்டு மாமா நூற்றாண்டு விழா, குமாரசாமி நினைவு நூலகத்தைச் சேர்ந்த காவிரி வாசிப்பு இயக்க எழுத்தாளர்கள், வாசகர்கள்,  ஆண்டு பொது தேர்வு முடிந்த பின் கலந்து கொண்டனர்.  

தலைமை ஆசிரியரின் வழிகாட்டலில்,  ஓவிய ஆசிரியை திருமதி மா.சாந்தினி அவர்களின் நெறியாள்கையில், உடற்கல்வி ஆசிரியர் திரு ரத்னவேலு ஐயா அவர்களின் உதவியுடன்  இந்நிகழ்வு நடந்தேறியது.


ஓவிய ஆசிரியை திருமதி மே.சாந்தினி அவர்கள், AI உருவாக்கிய, வாண்டு மாமா புத்தக அட்டை ஓவியங்கள் கீழே:







மாணவி தவவர்ஷினி, வாண்டு மாமாவின் புத்தகப் பட்டியலில் இல்லாத, எங்கள் நூலகத்தில் இருந்த அரிய நூலான, 
"மானம் காத்த மங்கையர்" நூல் குறித்துத் தான் எழுதிய கட்டுரையை வாசித்தார்.  
அக்கட்டுரை, bookday.in  ற்கு அனுப்பப்பட்டுள்ளது.





நிகழ்வில், டைம்ஸ் ஆப் இந்தியாவில், 
வினோத் குமார் எழுதிய
வாண்டு மாமா பற்றிய கட்டுரை அறிவிப்புப் பலகையில், நூலகத்தில் ஒட்டப்பட்டது.



நிகழ்வில், தி இந்து தமிழ் திசையில், வாண்டு மாமா குறித்து ஆதி வள்ளியப்பன் எழுதிய கட்டுரை வாசிக்கப்பட்டது.




நிதழ்வில் கலந்து கொண்ட காவேரி வாசிப்பு இயக்க மாணவ மாணவர்கள்















வாண்டு மாமாவின் அதிசய வீணை, மானம் காத்த மங்கையர் ஆகிய  இரு நூல்கள், எங்கள் பள்ளி நூலக வலைப்பூவில், மின் நூலாகப் பதிவேற்றப்பட்டன.

மானங் காத்த மங்கையர் புத்தகத்திற்கு முகப்பு அட்டை ஓவியத்தை, மாணவி பா.சண்முகபிரியா வரைந்தார்.





No comments:

Post a Comment

உலகப்புத்தகத் தின விழா

இன்று  உலகப்புத்தகத் தினவிழா 2025, நம் பள்ளி குமரசாமி நினைவு நூலகத்தில் நடைபெறுகிறது. ஆசிரியர், மாணவர்கள்  தங்கள் படைப்புகளை (எழுத்து, காணொல...