இன்று மாலை, வாண்டு மாமா நூற்றாண்டு விழா, குமாரசாமி நினைவு நூலகத்தைச் சேர்ந்த காவிரி வாசிப்பு இயக்க எழுத்தாளர்கள், வாசகர்கள், ஆண்டு பொது தேர்வு முடிந்த பின் கலந்து கொண்டனர்.
தலைமை ஆசிரியரின் வழிகாட்டலில், ஓவிய ஆசிரியை திருமதி மா.சாந்தினி அவர்களின் நெறியாள்கையில், உடற்கல்வி ஆசிரியர் திரு ரத்னவேலு ஐயா அவர்களின் உதவியுடன் இந்நிகழ்வு நடந்தேறியது.
ஓவிய ஆசிரியை திருமதி மே.சாந்தினி அவர்கள், AI உருவாக்கிய, வாண்டு மாமா புத்தக அட்டை ஓவியங்கள் கீழே:
நிகழ்வில், தி இந்து தமிழ் திசையில், வாண்டு மாமா குறித்து ஆதி வள்ளியப்பன் எழுதிய கட்டுரை வாசிக்கப்பட்டது.
வாண்டு மாமாவின் அதிசய வீணை, மானம் காத்த மங்கையர் ஆகிய இரு நூல்கள், எங்கள் பள்ளி நூலக வலைப்பூவில், மின் நூலாகப் பதிவேற்றப்பட்டன.
மானங் காத்த மங்கையர் புத்தகத்திற்கு முகப்பு அட்டை ஓவியத்தை, மாணவி பா.சண்முகபிரியா வரைந்தார்.
No comments:
Post a Comment