Thursday, August 14, 2025

பேசும் கிளிகள்

பேசும் கிளிகள்  - சிறுகதைப் புத்தகம்

வணக்கம். இன்று சுதந்திரத் தின விழா. 

காவேரி வாசிப்பு இயக்கத்தில், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலைவேளையில், குமரசாமி நினைவு நூலகத்தில்,  கதை சொல்லுதல், கவிதை சொல்லுதல், புத்தக அறிமுகம், புத்தக விமர்சனம் நடைபெற்று வருகிறது.  இதற்கிடையில் தமிழ்நாடு அரசுப் பள்ளிக்கல்வித்துறையின்  வாசிப்பு இயக்கத்திற்காகக் கதைகள் எழுதத் தொடங்கினோம்.  இரண்டு வாரம் கதை எழுதும் பயிற்சி நடந்தது.   தூலிகா, ஏகலைவா, பிரதம் புக்ஸ், வானம் பதிப்பகம், நேஷ்னல் புக் டிரஸ்ட், சில்ரன் டிரஸ்ட் புக் ஆகியவற்றின் சிறார் நூல்கள்,  எங்கள் பள்ளிக்கு  இந்தியன் லிடெரரி பிராஜெக்ட் வழியாகக் கிடைத்தன. ஏற்கெனவே தமிழ்நாடு அரசின் வாசிப்பு இயக்கப் புத்தகங்களை வாசித்திருக்கிறோம். மூன்றாம் கட்டப் புத்தகங்களை 16 அரசுப்பள்ளி மாணவர்கள் எழுதியுள்ளனர். இதில் ஒன்று எங்கள்  பள்ளி முன்னாள் மாணவி சா.ஹரிணி எழதிய என் நண்பர்கள் எங்கே? புத்தகம். இன்னொன்று எங்கள் பள்ளி முன்னாள் மாணவர் அ.அன்புசெல்வன் எழுதிய பூக்களின் அமைதி. இரண்டு பேரும் காவிரி வாசிப்பு இயக்கத்தில்  உருவானவர்கள். இவைதான் எங்களுக்கு எழுதுவதற்கான உத்வேகத்தைக் கொடுத்தன.

எங்கள் கனவின் கதைத் தொகுதி அடுத்து, மூன்றாண்டுகளுக்குப் பிறகு, இத்தொகுதி வந்துள்ளது. மகிழ்ச்சி தருகிறது. எங்கள் கதைகள் புத்தகமாக வரும் சந்தோஷமே  ஒரு கனவாகத் தோன்றுகிறது.

தமிழ்நாடு அரசின் மாண்புமிகு  முதலமைச்சர், மாண்புமிகு துணை  முதலமைச்சர் மாண்புமிகு கல்வி அமைச்சர், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், எங்கள் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இப்புத்தகத்தை அரசுப் பள்ளிச் சிறார் எழுத்தாளர்களுக்குப் படைக்கிறோம்.

வெ.கற்பகலட்சுமி -பி.சந்தோஷ்

கும்பகோணம்

கீழே காணும் இப்புத்தகத்தைத் தரவிறக்கம் செய்ய, புத்தக  முகப்பு அட்டையைச் சொடுக்கவும்.





No comments:

Post a Comment

முப்பெரும் விழா

இன்று, இப்பள்ளியின் குமரசாமி நினைவு நூலகத்தில், கும்பகோணத்தைச் சேர்ந்த, தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை  ந.பிச்சமூர்த்தி 125 வது பிறந்தநாள், த...