Thursday, November 14, 2024

57வது தேசிய நூலக வார விழா- அரிய புத்தகங்கள் கண்காட்சி

 அரிய புத்தகங்களின் கண்காட்சி


எங்கள் பள்ளி நூலகத்தில் உள்ள அமரர் நேரு எழுதிய , நேருவைப் பற்றி எழுதப்பட்ட அரிய புத்ததகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. மட்டுமல்லாது, அப்புத்தகங்களை மாணவர்கள் பார்க்கும் வண்ணம், அப்புத்தகங்களின் சிறப்புக் குறித்து ஆசிரியர் திரு ரா.தாமோதரன் விளக்கினார். 1947 முதல் 2024 வரை உள்ள புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.

                                     


                                     











57 வது தேசிய நூலக வார விழா - ஜவஹர்லால் நேரு புத்தகங்கள் மின்னூலாக்கம்

 57ஆவது தேசிய நூலக வார விழா


57 வது தேசிய நூலக வார விழா முன்னிட்டு, எங்கள் பள்ளி நூலகத்தில் இருந்த, அமரர் நேரு எழுதிய மற்றும் நேரு பற்றி எழுதப்பட்ட,  அரிய புத்தகங்கள் காட்சிக்கு  வைக்கப்பட்டன. மேலும் மாணவர்கள் அப்புத்தகங்களை மின்னூலாக்கித் தந்தனர். இப்பொழுது அப்புத்தகங்களைக் கீழே காணும் படங்களைச் சொடுக்கித் தரவிறக்கம் செய்து  இலவசமாக வாசிக்கலாம். இப்புத்தகங்கள் அனைத்தும் காப்புரிமை அற்றவை.









Wednesday, November 13, 2024

கதை எழுதலாம் வாங்க - புத்தக வெளியீடு

கதை எழுதலாம் வாங்க!

(கதை எழுதுதல் கையேடு)


    காவேரி வாசிப்பு இயக்கம் சார்பாக, இப்பள்ளியின் முன்னாள் மாணவரும் தற்போது பாணாதுறை அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் அ.அன்புசெல்வனும் (பைராகி), இப்பள்ளியின் மாணவி சா.ஹரிணி (ஸ்ரீ காயத்ரி)யும், கதை எழுதுவதற்கான கையேட்டினை உருவாக்கி உள்ளனர். 

இப்புத்தகமானது, 14.11.2024 குழந்தைகள் தினம் முன்னிட்டு வெளியிடப்படுகிறது.  இக்கையேட்டினை இலவசமாக வாசிக்க, கீழே காணும் படத்தினைச் சொடுக்கி, தரவிறக்கம் செய்து வாசிக்கலாம்.  அனைவருக்கும் பகிரலாம்.






உலகப்புத்தகத் தின விழா

இன்று  உலகப்புத்தகத் தினவிழா 2025, நம் பள்ளி குமரசாமி நினைவு நூலகத்தில் நடைபெறுகிறது. ஆசிரியர், மாணவர்கள்  தங்கள் படைப்புகளை (எழுத்து, காணொல...