காவேரி வாசிப்பு இயக்கம்
எங்கள் பள்ளியில் உள்ள குமரசாமி நினைவு நூலகத்தில், முதன்முறையாக வாசிப்பு இயக்கத்தை ஏற்படுத்த மாணவர்கள்தான் காரணம். அவர்கள்தான் தாங்கள் வாசித்ததை எழுத வாசிப்பு ஏடு கேட்டு எழுதினர். பள்ளிக்கு அருகில் உள்ள நூலகத்தில் உறுப்பினராக வாசிக்கத் தொடங்கினர். பள்ளியில், அரசுப் பள்ளியில் முதன்முதலாக இளம் வாசகர் வட்டம் தொடங்கப்பட்டது.
எங்கள் பள்ளியில் உள்ள அரிதான நூலகத்தைச் செப்பனிட்டு, வாசிப்பு இயக்கம் (இளம் வாசகர் வட்டம்) தொடங்கினர்.
அறிஞர் அண்ணா அரசு மேனிலைப்பள்ளி,
கும்பகோணம்
இளம் வாசகர் வட்டச் செயல்பாடுகள்
இளம் வாசகர் வட்டம் 2021-2022
வ.எண் |
நாள் |
செயல்பாடு |
1 |
11.07.2021 |
பள்ளி நூலகத்தை ஒழுங்குப்படுத்துதல் முன்னாள் மாணவர்கள் ஜெகதீஷ், ஜெய் கணேஷ் மாணவர் குழு |
2 |
07.10.2021 |
கொரோனா காலம் முடிந்து பள்ளிக்கு வருகைபுரிந்த மாணவர்களின்
வாசிப்புத் திறனைப் பலப்படுத்த, மாணவர்களை அரசுப் பொதுநூலகத்தில் உறுப்பினராக்குதல்.
வாரம் ஒரு புத்தகம் – திட்டம் கொண்டு வருதல் |
3 |
09.10.2021 |
தி இந்து தமிழ் திசை இதழில், எங்கள் பள்ளி வாசிப்புச் செயல்பாடு
பற்றிய செய்தி |
4 |
10.12.2021 |
அரசின் ஆணைப்படி, எங்கள் பள்ளியில் இளம் வாசகர் வட்டம்
உருவாக்குதல் – வாசிப்புப் போட்டி நடத்துதல். |
5 |
10.12.2021 |
இளம் வாசகர் வட்டம் சார்பாக மாணவர்கள் நூலகத்தில் வாசித்தல்
மற்றும் குறிப்பெடுத்தல் |
6 |
10.12.2021 |
நூலகத்திற்கு மாணவர்கள் புத்தக நன்கொடை வழங்குதல் |
7 |
10.12.2021 |
பள்ளி நூலகம் பாதுகாப்போம் என்ற கட்டுரையைத் தமிழாசிரியர்
தி இந்து தமிழ் திசை இதழில் எழுதுகிறார். |
8 |
15.12.2021 |
வாசிப்பு ஏடு - ஒன்று உருவாக்கி மாணவர்கள் தாங்கள் படித்த புத்தகத்தைப்
பற்றி, பெற்றோர் ஒத்துழைப்புடன் எழுதத் தொடங்குதல் |
9 |
23.12.2021 |
https://www.youtube.com/watch?v=40ejx35j2dw&t=25s யுடியூப்பில், இளம் வாசகர் வட்டச் செயல்பாடுகளில் புத்தக
விமர்சங்களைப் பதிவேற்றுதல். |
10 |
24.12.2021 |
இளம் வாசகர் வட்டம் சார்பாக நடத்தப்பட்ட டிசம்பர் மாத வாசிப்புப்
போட்டியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு எழுதுதல் |
11 |
07.01.2022 |
மாணவர்கள் அமர்ந்து வாசிக்கவும் குறிப்பெடுக்கவும் தலைமையாசிரியர்
திரு வி. சாரதி அவர்கள் எழுதுமேசைகளை, இருக்கைகளை அமைத்தல் |
12 |
28.01.2022 |
ஜனவரி மாதப் போட்டி முடிவுகள் - சான்றிதழ் - பரிசுகள் அளித்தல் |
13 |
29.01.2022 |
ஆசிரியர், மாணவர்கள், ஆசிரியர்களின் குழந்தைகள் நூலகத்தைப்
பயன்படுத்துதல் |
14 |
02.02.2022 |
நூலகத்தில் உள்ள மிக அரிதாக காப்புரிமையற்ற நூல்களை மின்
நூலக்கம் செய்யத் தொடங்குதல். |
15 |
03.02.2022 |
எங்கள் பள்ளிக்காக https://aaghsskumbakonam.blogspot.com/ ஒரு வலைப்பூவை
உருவாக்கி, அதில் மின் நூல்களைப் பதிவேற்றல். |
15 |
03.02.2022 |
தஞ்சை முதன்மைக் கல்வி அலுவலர் திரு.மு.சிவக்குமார் அவர்கள்
ஆசிரியர்களுக்காகத் தொடங்கிய, தஞ்சை வாசிப்போம் நேசிப்போம் – புத்தக விமர்சனம் -ஆண்
பிரிவில், இப்பள்ளி தமிழாசிரியர் திரு ரா.தாமோதரன் ஜனவரி மாத வாசிப்புப் போட்டியில்
முதல் இடம் பெற்றுப் பரிசு பெறுதல். |
16 |
04.02.2022 |
ஆங்கில நூல்கள் வாசிக்க, “அனைவருக்கும் அகராதி” என்ற திட்டத்தை
முன்வைத்த மாணவன் சு.பரணிதரனுக்கு இளம் வாசகர் வட்டம் சார்பாக பரிசளித்தல் |
17 |
04.02.2022 |
அனைவருக்கும் அகராதி என்ற திட்டத்திற்காக, ஆங்கிலப் பட்டதாரி
ஆசிரியை திருமதி ஆர்.சாந்தி அவர்கள் நூலகத்திற்கும் மாணவன் சு.பரணிதரனுக்கும் அகராதியை
பரிசளித்தல் |
18 |
20.02.2022 |
எங்கள் பள்ளி மின் நூலாக்கம் குறித்து, தி இந்து தமிழ்
திசை இதழில் செய்திக்குறிப்பு |
19 |
23.02.2022 |
இப்பள்ளியிலிருந்து தலைமையாசிரியர் பதவிக்கு உயர்ந்த முதுகலை
ஆசிரியர் திரு. எம். தியாகராஜன் அவர்கள் பள்ளி நூலகத்திற்கு ரூ.3000க்கான நூல்களை
வழங்குதல். |
20 |
27.02.2022 |
பிப்ரவரி மாதப் போட்டி முடிவுகள் - சான்றிதழ் - பரிசுகள்
அளித்தல் |
22 |
01.04.2022 |
மார்ச் மாதப் போட்டி முடிவுகள் - சான்றிதழ் - பரிசுகள்
அளித்தல் |
23 |
11.04.2022 |
நூலகத்தை ஒழுங்குப்படுத்துல் – நூல் இருப்புப் பதிவேடு
தயாரித்தல் – நூல் இரவல் பதிவேடு நடைமுறைப்படுத்துதல் செய்த ஒன்பதாம் வகுப்பு – அ
பிரிவு மாணவர்களுக்குத் தலைமையாசிரியர் விருந்தளித்தல். |
24 |
21.04.2022 |
எழுத்தாளர் ஆதி. வள்ளியப்பன், இளம் வாசகர் வட்டம் சார்பாக
நடைபெறும் உலகப் புத்தகத் தினவிழா போட்டிப் பரிசுப் புத்தகங்களை நன்கொடையாக அனுப்பி
வைத்தார். |
25 |
23.04.2022 |
உலகப்புத்தகத் தினவிழா மற்றும் இளம் வாசகர் வட்டம் நிறைவு
விழா நடத்துதல் 1.
உலகப் புத்தகத்
தினவிழாவில், இளம் வாசகர் வட்ட உறுப்பினர்களைக் கும்பகோணம் மாநகரத் துணை மேயர் திரு.சுப.தமிழகன்
அவர்கள் சிறப்பித்தல் மற்றும் நூலகத்திற்கு மின் விசிறி வசதிகள் ஏற்படுத்துதல். 2.
குழந்தை செயற்பாட்டாளர்
இனியன் கலந்து கொள்ளல் 3.
உலகப் புத்தகத்
தினவிழா வாசிப்புப் போட்டியில் பங்கேற்றவர்களுக்குப் புத்தகங்களும் பரிசுகளும் வழங்குதல் |
26 |
03.05.2022 |
இளம் வாசகர் வட்டச் செயல்பாடுகளை அறிந்து, குழந்தை எழுத்தாளர்
இனியன் அவர்கள் தான் எழுதிய 19 புத்தகங்களை நூலகத்திற்கு வழங்கினார். |
27 |
12.05.2022 |
இளம் வாசகர் வட்டச் செயல்பாடுகளை அறிந்து, அழிசி பதிப்பகத்தாரும்
எழுத்தாளருமான திரு ஸ்ரீநிவாஸ கோபாலன் அவர்கள், தன்னறம் பதிப்பகத்தின் நூல்களை வழங்குதல். |
நூலகத் தூய்மையாக்கம
பள்ளித் திறப்பதற்கு முன், கொரோனா காலத்தில் கடந்த ஒரு வருடமாக
மூடப்பட்ட மாணவர்கள் பலர் ஒத்துழைப்பில், இரவு காவலர் திரு ராஜா அவர்கள் மற்றும் அன்பு மாணவர் ஜெதீஷ் உதவியுடன்
தூய்மைப்படுத்தப்பட்டது.
நூலக உறுப்பினர் சேர்க்கை
1. கொரோனா காலம் முடிந்து பள்ளிக்கு வருகைபுரிந்த மாணவர்களின் வாசிப்புத் திறனைப் பலப்படுத்த,மாணவர்களை அரசுப் பொதுநூலகத்தில் உறுப்பினராக்குதல்.
2. வாரம் ஒரு புத்தகம் திட்டம் கொண்டு வருதல்
07.10.2021
வாரம் ஒரு புத்தகம் திட்டம்
எங்கள் பள்ளியில் தொடங்கப்பட்ட “வாரம் ஒரு புத்தகம்” திட்டத்தைப் பற்றி, தி இந்து தமிழ் திசை இதழில் 09.07.2021 அன்று வந்த செய்திக்குறிப்பு.
இளம் வாசகர் வட்டம்
1.
அரசின் ஆணைப்படி,
எங்கள் பள்ளியில் இளம் வாசகர் வட்டம் 03.10.2022 அன்று உருவாக்குதல்
2.
ஒருங்கிணைப்பாளர்,
செயலர், உறுப்பினர்கள் தேர்வு
3.
டிசம்பர் மாத
வாசிப்புப் போட்டி அறிவிப்புச் செய்தல்.
அறிஞர் அண்ணா அரசு மேனிலைப்பள்ளி, கும்பகோணம் |
|||
இளம் வாசகர் வட்டப் பொறுப்பாளர்கள் |
|||
தலைவர் |
ஒருங்கிணைப்பாளர் |
செயலர் |
துணைச்செயலர் |
திரு வை. சாரதி. தலைமையாசிரியர் |
திரு ரா.தாமோதரன் தமிழ் ஆசிரியர் |
செல்வி சா.ஹரிணி, ஒன்பது -அ |
செல்வன் ச. அனுஷ்வேல் ஒன்பது - அ |
உறுப்பினர்கள் |
|||
சீ. அருந்ததி - 6 - அ செல்வி அ. ப்ரீத்தி 7 - அ ஜெ. அன்பழகி 8- ஆ ரா.கவிப்ரியா 9 – அ நெ.ஷ்யாம் சுந்தர்
10 – ஆ மு.சத்யா 11 -
ஈ த. அன்னலட்சமி 12 - ஆ |
No comments:
Post a Comment