வணக்கம்.
எங்கள் பள்ளியில் செயல்பட்ட இளம் வாசகர் வட்ட மாணவ எழுத்தாளர்கள் எழுதிய கதைகள், 25 கதைகள் என்ற தலைப்பில் மின்னூலாக வெளியிடப்பட்டது. பின்பு, தன்னறம் குக்கூ காட்டுப் பள்ளி சார்பாக, என் கனவின் கதை என்ற தலைப்பில் புத்தகமாக, மு.ப 2023 இல் வெளியானது. அதற்கு நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையின் முகநூலில் இச்செய்தி வெளியிடப்பட்டுப் பாராட்டப்பட்டது. இந்நூலை முன்னாள் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் திரு க.நந்தகுமார் அவர்கள் 05/05/2023 அன்று வெளியிட்டார்.
(விஷ்ணுபுரம் சரவணன், இரா.தாமோதரன், இணை இயக்குநர் திருமதி.செ.அமுதவல்லி, பள்ளிக்கல்வி துறை ஆணையர் திரு க.நந்தகுமார், யெஸ்.பாலபாரதி)
இந்நூல் குறித்து
இந்து தமிழ் திசை நாளிதழில் (மே 17இ 2023) விமர்சனம் வந்தது
No comments:
Post a Comment