இன்று உலகப்புத்தகத் தினவிழா 2025, நம் பள்ளி குமரசாமி நினைவு நூலகத்தில் நடைபெறுகிறது. ஆசிரியர், மாணவர்கள் தங்கள் படைப்புகளை (எழுத்து, காணொலிகள்) அனுப்பலாம்.
E- LIBRARY AAGHSSKUMBAKONAM
Tuesday, April 22, 2025
உலகப்புத்தகத் தின விழா
இன்று உலகப்புத்தகத் தினவிழா 2025, நம் பள்ளி குமரசாமி நினைவு நூலகத்தில் நடைபெறுகிறது. ஆசிரியர், மாணவர்கள் தங்கள் படைப்புகளை (எழுத்து, காணொலிகள்) அனுப்பலாம்.
நம்பிக்கை நட்சத்திரம் - உர்துக் கதைகள்
1967இல், 21 உருது எழுத்தாளர்களின் கதைகள், முக்தார் அவர்களின் மொழிபெயர்ப்பில், அருணோதயம் வெளியீடாக, நம்பிக்கை நட்சத்திரம் சிறுகதைத்தொகுதி வந்துள்ளது.
உலகப் புத்தகத் தினம் (23.04.25) முன்னிட்டு, இப்புத்தகத்தை வாசிக்கவும் தரவிறக்கம் செய்து பகிரவும் கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும்
Monday, April 21, 2025
வாண்டு மாமா நூற்றாண்டு விழா
இன்று மாலை, வாண்டு மாமா நூற்றாண்டு விழா, குமாரசாமி நினைவு நூலகத்தைச் சேர்ந்த காவிரி வாசிப்பு இயக்க எழுத்தாளர்கள், வாசகர்கள், ஆண்டு பொது தேர்வு முடிந்த பின் கலந்து கொண்டனர்.
தலைமை ஆசிரியரின் வழிகாட்டலில், ஓவிய ஆசிரியை திருமதி மா.சாந்தினி அவர்களின் நெறியாள்கையில், உடற்கல்வி ஆசிரியர் திரு ரத்னவேலு ஐயா அவர்களின் உதவியுடன் இந்நிகழ்வு நடந்தேறியது.
ஓவிய ஆசிரியை திருமதி மே.சாந்தினி அவர்கள், AI உருவாக்கிய, வாண்டு மாமா புத்தக அட்டை ஓவியங்கள் கீழே:
நிகழ்வில், தி இந்து தமிழ் திசையில், வாண்டு மாமா குறித்து ஆதி வள்ளியப்பன் எழுதிய கட்டுரை வாசிக்கப்பட்டது.
வாண்டு மாமாவின் அதிசய வீணை, மானம் காத்த மங்கையர் ஆகிய இரு நூல்கள், எங்கள் பள்ளி நூலக வலைப்பூவில், மின் நூலாகப் பதிவேற்றப்பட்டன.
மானங் காத்த மங்கையர் புத்தகத்திற்கு முகப்பு அட்டை ஓவியத்தை, மாணவி பா.சண்முகபிரியா வரைந்தார்.
எத்தொழிலை நான் தேர்ந்தெடுப்பேன்?
விளதீமிர் மயக்கோவ்ஸ்கி எழுதிய எத்தொழிலை நான் தேர்ந்தெடுப்பேன்? என்ற ருஷ்ய சிறார் நூல், தமிழில் 1985ஆம்ஆண்டு வெளியானது. இந்த அரிய நூலைத் தரவிறக்கும் செய்து வாசிக்கவும் பகிரவும் கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும்.
Sunday, April 20, 2025
வாண்டுமாமா நூற்றாண்டு விழா
வாண்டு மாமா நூற்றாண்டுவிழா
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் முதன்முறையாக, நம் பள்ளியில், வாண்டுமாமா நூற்றாண்டுவிழா, குமரசாமி நினைவுநூலகத்தில் நடைபெறுகிறது. அதற்கான நிகழ்ச்சிநிரல் கீழே தரப்பட்டுள்ளது. அவருடைய மின்னூல்கள் நம் வலைப்பூவில் பதிவேற்றப்பட்டுள்ளன.
ஓட்டமும் நடையும் - கு.ப.சேது அம்மாள்
தமிழில் முதன்முறையாகச் சிறுகதைத் தொகுதி வெளியிட்ட பெண் எழுத்தாளர் என்ற சிறப்பைப் பெற்ற கு.ப.சேது அம்மாள், கும்பகோணத்தைச் சேர்ந்தவர். இவருடைய அண்ணன்தான் கு.ப.ரா. மூன்று தலைமுறைக் குடும்பத்தின் வாழ்வையும் வரலாற்றையும் விரிவாகக் கூறும் இந்த அரிய நூல், 1972ஆம் ஆண்டு அறிவுச்சுடர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
இந்த அரிய நூலினைத் தரவிறக்கம் செய்து வாசிக்கவும் பகிரவும் கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும்.
மூன்று தடியர்கள்
மூன்று தடியர்கள் என்ற ருஷ்ய சிறார் நாவலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் திரு.பூ.சோமசுந்தரம் ஆவார். இது குழந்தைகளுக்கான நாவல் என்ற குறிப்பு உள்ளது. இந்த நூல் 1985ஆம் ஆண்டு தமிழில் வெளியாகியுள்ளளது. இந்த அரிய நூலினைத் தரவிறக்கம் செய்து வாசிக்கவும் பகிரவும் கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும்.
உலகப்புத்தகத் தின விழா
இன்று உலகப்புத்தகத் தினவிழா 2025, நம் பள்ளி குமரசாமி நினைவு நூலகத்தில் நடைபெறுகிறது. ஆசிரியர், மாணவர்கள் தங்கள் படைப்புகளை (எழுத்து, காணொல...

-
காவேரி வாசிப்பு இயக்க நூல்கள் வணக்கம். எங்கள் பள்ளியில் கடந்து மூன்று ஆண்டுகளாகச் செயல்படும் இளம் வாசகர் வட்டம், காவேரி வாசிப்பு இயக்கத்தி...
-
இளம் வாசகர் வட்டத்தின் எழுத்தாளரான ஸ்ரீகாயத்ரியின் (சா.ஹரிணி) முதல் சிறுகதைத்தொகுப்பு இது. இக்கதைகள் யாவும் அவருடைய அனுபவத்திலிருந்து எழுதப்...
-
PARROT HOUSE - SRI GAYATHRI கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேனிலைப்பள்ளியில் படிக்கும், இளம் வாசகர் வட்டம் மற்றும் காவேரி வாசிப்பு இயக்க எழுத...