Wednesday, November 26, 2025

தாராசுரம் - வெளியீடு

நம் பள்ளியில்,  குமரசாமி நினைவு நூலகம் சார்பாக, காவிரி வாசிப்பு இயக்க மாணவர் ஹிதேந்திரன் சுரேஷ் எழுதிய, "தாராசுரம் - ஒரு சிற்பியின் கனவு" நூல்,  26/11/25 அன்று, பள்ளி வழிபாட்டு கூடத்தில் வெளியிடப்பட்டது.  

நம் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும், மாணவி ஹர்ஷிதா வெளியிட, ஒன்பதாம் வகுப்பு மாணவி துவாரகா பெற்றுக் கொண்டார். முடிவில், தாராசுரம் புத்தகம் உருவானது குறித்தும்,  இப்புத்தகம் வெளியிட காரணமாக இருந்த கும்பகோணம் துணை மேயர் திரு சு.ப.தமிழழகன் அவர்களுக்கு ஹிதேந்திரன் சுரேஷ் நன்றி தெரிவித்தும் பேசினார்.






Tuesday, November 25, 2025

சீ அருந்ததி

குமரசாமி நினைவு நூலகத்தில், 14/11/25 அன்று, பிற்பகல் 1.00 - 1.40 வரை நடந்த கூட்டத்தில், ஜீவநதி புத்தகத்தைப் படி எடுத்து தந்த, சீ.அருந்ததிக்குப்  பாராட்டு விழா நடந்தது.  

கும்பகோணம் சரஸ்வதி பெண்கள் பாடசாலைப் பள்ளி நூலகத்தில் இருந்த, ஜீவநதி (தமிழாக்கம் : கி.ரா , 1965) அமெரிக்கச் சிறுகதைத் தொகுப்பை, நம் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி சீ.அருந்ததி படி எடுத்துத் தந்தார். அப்புத்தகத்தை, மலர் புக்ஸ் மறு பதிப்பு செய்துள்ளது. அப் புத்தகத்தில், இருவருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர். 

அவருக்கு, பேசும் கிளிகள் புத்தகம் நினைவுப் பரிசாக அளிக்கப்பட்டது.










கு.சுதர்ஸன்

நம் பள்ளியில், ஆறாம் வகுப்பு படிக்கும் கு.சுதர்ஸன், பேசும் கிளிகள் என்ற தொகுப்பில் எழுதிய, 'காளான்' என்கிற கதை, தேன்சிட்டு - நவம்பர் 2025 (குழந்தைகள் தின சிறப்பிதழ்) இதழில், படக் கதையாக வந்துள்ளது. இப் படைப்பாளியை வழிபாட்டுக்கூடத்தில், தலைமை ஆசிரியை அவர்கள் பாராட்டினார்.







வாசிப்பு அனுபவம் - 3

குமரசாமி நினைவு நூலகத்தில்,  காவேரி வாசிப்பு இயக்க மாணவர்கள், 07/11/25 அன்று மதியம், பிற்பகல் 1.00 - 1.40 வரை, தமிழ்நாடு அரசு வெளியிட்ட வாசிப்பு இயக்க புத்தகங்கள் அனுபவம் பற்றிக் கூறினர்.










வாசிப்பு அனுபவம் - 2

குமரசாமி நினைவு நூலகத்தில், பள்ளிக்கல்வித்துறை, மூன்றாம் கட்ட பு இயக்கப்  புத்தகங்கள் குறித்து, காவேரி வாசிப்பு இயக்க மாணவர்கள் தம் அனுபவங்களை, 30/11/25 அன்று , மதியம் 1.00 - 1.40 வரை பகிர்ந்து கொண்டனர்.











வாசிப்பு அனுபவம் -1

தமிழ்நாடு அரசு, பள்ளிக் கல்வித்துறை, மூன்றாம் கட்ட வாசிப்பு இயக்கப் புத்தகம் - - வாசிப்பு, 24/10/25 அன்று, மதியம் 1.00 - 1.40 வரை, குமரசாமி நினைவு நூலகத்தில் நடைபெற்றது.










மழைக்கப்பல்

நூல் வெளியீடு நம் பள்ளியில், 20/02/2026 அன்று, பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு, காவேரி வாசிப்பு இயக்கம் சார்பாக, இ...