இன்று உலகப்புத்தகத் தினவிழா 2025, நம் பள்ளி குமரசாமி நினைவு நூலகத்தில் நடைபெறுகிறது. ஆசிரியர், மாணவர்கள் தங்கள் படைப்புகளை (எழுத்து, காணொலிகள்) அனுப்பலாம்.
Tuesday, April 22, 2025
உலகப்புத்தகத் தின விழா
இன்று உலகப்புத்தகத் தினவிழா 2025, நம் பள்ளி குமரசாமி நினைவு நூலகத்தில் நடைபெறுகிறது. ஆசிரியர், மாணவர்கள் தங்கள் படைப்புகளை (எழுத்து, காணொலிகள்) அனுப்பலாம்.
நம்பிக்கை நட்சத்திரம் - உர்துக் கதைகள்
1967இல், 21 உருது எழுத்தாளர்களின் கதைகள், முக்தார் அவர்களின் மொழிபெயர்ப்பில், அருணோதயம் வெளியீடாக, நம்பிக்கை நட்சத்திரம் சிறுகதைத்தொகுதி வந்துள்ளது.
உலகப் புத்தகத் தினம் (23.04.25) முன்னிட்டு, இப்புத்தகத்தை வாசிக்கவும் தரவிறக்கம் செய்து பகிரவும் கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும்
Monday, April 21, 2025
வாண்டு மாமா நூற்றாண்டு விழா
இன்று மாலை, வாண்டு மாமா நூற்றாண்டு விழா, குமாரசாமி நினைவு நூலகத்தைச் சேர்ந்த காவிரி வாசிப்பு இயக்க எழுத்தாளர்கள், வாசகர்கள், ஆண்டு பொது தேர்வு முடிந்த பின் கலந்து கொண்டனர்.
தலைமை ஆசிரியரின் வழிகாட்டலில், ஓவிய ஆசிரியை திருமதி மா.சாந்தினி அவர்களின் நெறியாள்கையில், உடற்கல்வி ஆசிரியர் திரு ரத்னவேலு ஐயா அவர்களின் உதவியுடன் இந்நிகழ்வு நடந்தேறியது.
ஓவிய ஆசிரியை திருமதி மே.சாந்தினி அவர்கள், AI உருவாக்கிய, வாண்டு மாமா புத்தக அட்டை ஓவியங்கள் கீழே:
நிகழ்வில், தி இந்து தமிழ் திசையில், வாண்டு மாமா குறித்து ஆதி வள்ளியப்பன் எழுதிய கட்டுரை வாசிக்கப்பட்டது.
வாண்டு மாமாவின் அதிசய வீணை, மானம் காத்த மங்கையர் ஆகிய இரு நூல்கள், எங்கள் பள்ளி நூலக வலைப்பூவில், மின் நூலாகப் பதிவேற்றப்பட்டன.
மானங் காத்த மங்கையர் புத்தகத்திற்கு முகப்பு அட்டை ஓவியத்தை, மாணவி பா.சண்முகபிரியா வரைந்தார்.
எத்தொழிலை நான் தேர்ந்தெடுப்பேன்?
விளதீமிர் மயக்கோவ்ஸ்கி எழுதிய எத்தொழிலை நான் தேர்ந்தெடுப்பேன்? என்ற ருஷ்ய சிறார் நூல், தமிழில் 1985ஆம்ஆண்டு வெளியானது. இந்த அரிய நூலைத் தரவிறக்கும் செய்து வாசிக்கவும் பகிரவும் கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும்.
Sunday, April 20, 2025
வாண்டுமாமா நூற்றாண்டு விழா
வாண்டு மாமா நூற்றாண்டுவிழா
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் முதன்முறையாக, நம் பள்ளியில், வாண்டுமாமா நூற்றாண்டுவிழா, குமரசாமி நினைவுநூலகத்தில் நடைபெறுகிறது. அதற்கான நிகழ்ச்சிநிரல் கீழே தரப்பட்டுள்ளது. அவருடைய மின்னூல்கள் நம் வலைப்பூவில் பதிவேற்றப்பட்டுள்ளன.
ஓட்டமும் நடையும் - கு.ப.சேது அம்மாள்
தமிழில் முதன்முறையாகச் சிறுகதைத் தொகுதி வெளியிட்ட பெண் எழுத்தாளர் என்ற சிறப்பைப் பெற்ற கு.ப.சேது அம்மாள், கும்பகோணத்தைச் சேர்ந்தவர். இவருடைய அண்ணன்தான் கு.ப.ரா. மூன்று தலைமுறைக் குடும்பத்தின் வாழ்வையும் வரலாற்றையும் விரிவாகக் கூறும் இந்த அரிய நூல், 1972ஆம் ஆண்டு அறிவுச்சுடர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
இந்த அரிய நூலினைத் தரவிறக்கம் செய்து வாசிக்கவும் பகிரவும் கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும்.
மூன்று தடியர்கள்
மூன்று தடியர்கள் என்ற ருஷ்ய சிறார் நாவலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் திரு.பூ.சோமசுந்தரம் ஆவார். இது குழந்தைகளுக்கான நாவல் என்ற குறிப்பு உள்ளது. இந்த நூல் 1985ஆம் ஆண்டு தமிழில் வெளியாகியுள்ளளது. இந்த அரிய நூலினைத் தரவிறக்கம் செய்து வாசிக்கவும் பகிரவும் கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும்.
டாக்டர் ரங்காசாரி
பறக்கும் டாக்டர் ரங்காசாரி ஏழை மக்களுக்காகச் சொந்தமாக விமானம் வாங்கி, அதில் இலவசமாக ஊழியம் பார்த்தவர். அவரைப் பற்றி ராஜம் கிருஷ்ணன் எழுதிய நூல்தான் டாக்டர் ரங்காசாரி. தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் அருகில் இருக்கும் தென் சருக்கையைச் சேர்ந்தவர். எழுத்தாளர் கொனஷ்டையின் மாமா மகன்தான் டாக்டர் ரங்காசாரி.
இந்த அரிய நூலினைத் தரவிறக்கம் செய்து வாசிக்கவும் பகிரவும் கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும்.
பரதநாட்டியம் -
பாலசரஸ்வதி அவர்கள் எழுதிய பரதநாட்டியம் என்னும் அரிய நூலினைத் தரவிறக்கம் செய்து வாசிக்கவும் பகிரவும் கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும். பரத இலக்கணங்களைக் கூறும் இந்நூல் அரிதானது.
ஓவியக்கலை - நந்தலால் போஸ்
ஓவியக் கலை குறித்து நந்தலால் போஸ் எழுதிய நூலை அ.பெருமாள் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார். இந்த அரிய நூலை வாசிக்கவும் பகிரவும் கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும்.
அணு எங்கள் ஊழியன் - ஹென்றி ஏ டன்லப் - தி.ஜானகிராமன்
ஹென்றி ஏ.டன்லப் மற்றும் ஹான்ஸ் என்.டச் ஆகியோர் சேர்ந்து எழுதிய ATOM AT YOUR SERVICE என்னும் ஆங்கில நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் தி.ஜானகிராமன். இந்தச்செய்தி தி.ஜானகிராமன் வாழ்க்கை வரலாற்றுப் பட்டியலில் இல்லை.
இந்த அரிய நூலைத் தரவிறக்கம் செய்து வாசிக்கவும் பகிரவும் கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும்.
இந்தியச் சிற்பங்கள் - ஆர்.எஸ்.ருக்மணி
ஆர்.எஸ்.ருக்மணி எழுதிய இந்தியச் சிற்பங்கள் என்னும் இந்த அரிய நூலைத் தரவிறக்கம் செய்து வாசிக்கவும் பகிரவும் கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும்.
ஒலிக்குறிப்பகராதி - மு.சதாசிவம்
அடுக்குச்சொல் அகராதி, எதிர்ப்பத அகராதி வெளியிட்ட மு.சதாசிவம் அவர்களின் ஒலிகள் குறித்த அகராதிதான் இது.
இந்த அரிய நூலைத் தரவிறக்கம் செய்து வாசிக்கவும் பகிரவும் கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும்.
புதிய உலகம் - ஜேக்கஸ் மாரிடய்ன்
பிரெஞ்ச் எழுத்தாளரான ஜேக்கஸ் மாரிடய்ன் அவர்களின் நூலினைக் காங்கேயன் மொழிபெயர்த்துள்ளார். இதை ஜோதி நிலையம் வெளியிட்டுள்ளது..
இந்த அரிய நூலைத் தரவிறக்கம் செய்து வாசிக்கவும் பகிரவும் கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும்.
குழந்தைகளுக்கான குட்டிக் கதைகள் - லேவ் தல்ஸ்தோய்
லேவ் தல்ஸ்தோய் எழுதிய குழந்தைகளுக்கான குட்டிக்கதைகள் என்பது ருஷ்ய சிறார் நூல் ஆகும்.
இந்த அரிய நூலைத் தரவிறக்கம் செய்து வாசிக்கவும் பகிரவும் கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும்.
யானை - அலெக்சாந்தர் குப்ரீன்
ருஷ்ய சிறார் நூலான அலெக்சாந்தர் குப்ரீனின் யானை என்னும் நூலைத் தமிழில் பூ.சோமசுந்தரம் மொழிபெயர்த்துள்ளார்.
அழகிய படங்களை உடைய இந்த நூலைத் தரவிறக்கம் செய்து வாசிக்கவும் பகிரவும் கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும்.
குருவிக்குஞ்சு - ம.கார்க்கி
ம.கார்க்கி எழுதிய குருவிக்குஞ்சு என்னும் நூலைத் தமிழில் பூ.சோமசுந்தரம் மொழிபெயர்த்துள்ளார். இந்த நூல் சிறார் நூலாகும்.
அழகிய ஓவியங்களை உடைய இந்த அரிய நூலைத் தரவிறக்கம் செய்து வாசிக்கவும் பகிரவும் கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும்.
குரோவர் கிளீவ்லந்த்
பங்க் வெக்னால்ஸ் எழுதிய குரோவர் கிளீவ்லந்த் என்னும் வரலாற்றுப் புத்தகத்தைத் தமிழில் தி.ஜானகிராமன் மொழிபெயர்த்துள்ளார். இப்புத்தகம் 1965ஆம் ஆண்டு வெளியானது.
அமெரிக்காவைக் கட்டமைத்த 24 பேர்களில் ஒருவரான குரோவர் குறித்த இந்த நூலை மொழிபெயர்த்த தி.ஜானகிராமனின் மொழிபெயர்ப்புப் பட்டியலில் இடம்பெறாத நூல் இது.
இந்த அரிய நூலினைத் தி.ஜாவின் மகள் திருமதி சங்கரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த அரிய நூலினைத் தரவிறக்கம் செய்து வாசிக்கவும் பகிரவும் கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும்.
ஆளப் பிறந்தவர் - ஜார்ஜ் வாஷிங்டன் - தி.ஜானகிராமன்
அமெரிக்காவைக் கட்டமைத்ததாகக் கருதப்படும் 24 பேர்களில் ஒருவரான ஜார்ஜ் வாஷிங்டன் குறித்த நூலை ஜீனெட் ஈட்டன் எழுதியுள்ளார். இந்த நூலைத் தமிழில் தி.ஜானகிராமன் மொழிபெயர்த்துள்ளார்.
தி.ஜானகிராமன் குறித்த வரலாற்றுப் பதிவில், மொழியாக்கப் பட்டியலில் இடம் பெறாத அரிய நூல் இது. நம் பள்ளி சார்பாக இந்த நூல் படி எடுக்கப்பட்டு, தி.ஜானகிராமன் மகள் திருமதி சங்கரி அவர்களுக்கு அனுப்பப்பட்டது.
இந்த அரிய நூலைத் தரவிறக்கம் செய்து வாசிக்கவும் பகிரவும் கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும்.
பறவையினங்கள் - அநுத்தமா நூல்கள்
சலங்கைக் காக்கை
பறவை இனங்கள் தலைப்பில் அநுத்தமா எழுதிய முதல் நூல் தான் சலங்கைக் காக்கை. குழந்தைகள் தின வெளியீடாக இந்த நூல் 1959 ஆம்ஆண்டு வெளியாகியுள்ளது.
இந்த அரிய நூலைத் தரவிறக்கம் செய்து வாசிக்கவும் பகிரவும் கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும்.
வண்ணக்கிளி
பறவை இனங்கள் தலைப்பில் அநுத்தமா எழுதிய இரண்டாவது நூல்தான் வண்ணக்கிளி. குழந்தைகள் தின வெளியீடாக இந்த நூல் 1960 ஆம்ஆண்டு வெளியாகியுள்ளது.
இந்த அரிய நூலைத் தரவிறக்கம் செய்து வாசிக்கவும் பகிரவும் கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும்.
உஷா - கு.ப.சேது அம்மாள்
தமிழில் முதன்முதலில் சிறுகதைத்தொகுதியை வெளியிட்ட பெண் எழுத்தாளர் என்ற சிறப்பைப் பெற்றவர் கு.ப,சேது அம்மாள். இவருடைய பூர்விகம் கும்பகோணம். தமிழ்ச் சிறுகதையின் மாபஸான் என்று அழைக்கப்படும் கு.ப.ராஜகோபாலன் அவர்களின் தங்கை. இது ஒரு குடும்ப நாவல். இதனை ரைவம் பதிப்பகம், 1965 ஆண்டு வெளியிட்டது.
இந்த அரிய நூலினைத் தரவிறக்கம் செய்து வாசிக்கவும் பகிரவும், கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும்.
ஜீவநதி
ஜீவநதி என்னும் மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுதியை, மணிக்கொடி எழுத்தாளர் திரு கி.ரா என்று அழைக்கப்படும் கி.ராமச்சந்திரன் அவர்கள் 1956ஆம் ஆண்டு தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இந்த நூல் அமெரிக்கர்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை அலசும் எட்டுக்கதைகளைக் கொண்டது. புகழ்ப்பெற்ற எழுத்தாளர்களான ஜேம்ஸ் தர்பார், வில்லியம் சரோயன், ஓ ஹென்றி ஆகியோர் கதைகள் இத்தொகுதியில் உள்ளன.
இந்த அரிய நூலைத் தரவிறக்கும் செய்து வாசிக்கவும் பகிரவும் கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும்.
Saturday, April 19, 2025
சாவுக்கு அஞ்சாத சிறுவர்கள்
சாவுக்கு அஞ்சாத சிறுவர்கள் என்னும் ருஷ்ய சிறார் நாவல் தமிழில் 1978ல் வெளியானது. இந்த அரிய நூலைத் தமிழில் யார் மொழிபெயர்த்தார் என்ற குறிப்புப் புத்தகத்தில் இல்லை. இந்த நூல் வீரச் சிறுவர் கதைகள் என்ற குறிப்பு மட்டும் உள்ளது.
இந்த அரிய நூலைத் தரவிறக்கம் செய்து வாசிக்கவும் பகிரவும் கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும்.
விளையாட்டுப் பிள்ளைகள்
விளையாட்டுப் பிள்ளைகள்
நிக்கலாய் நோசவ் எழுதிய விளையாட்டுப் பிள்ளைகள் என்னும் ருஷ்ய சிறார் நாவல், ருக்மணி மற்றும் பூ.சோமசுந்தரம் ஆகியோரால் தமிழில் 1978இல் மொழிபெயர்க்கப்பட்டது. இந்த அரிய நூலினைத் தரவிறக்கம் செய்து வாசிக்க, கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும்.
வாண்டுமாமாவின் நூல்கள்
அதிசய வீணை
அனைவருக்கும் வணக்கம். இன்று வாண்டுமாமா நூற்றாண்டு நடைபெறுகிறது. நம்பள்ளியிலும் இவ்விழா நடைபெறுகிறது. வாண்டுமாமா 150க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். அவருடைய புத்தகப் பட்டியலில் இடம்பெறாத நூல்கள் (அதிசயவீணை, மானம் காத்த மங்கையர்கள்) இரண்டு நம் குமரசாமி நினைவு நூலகத்தில் உள்ளன. இவ்விரண்டையும் பதிவிறக்கம் செய்து வாசிக்க, அப்புத்தகங்களின் அட்டைப் படத்தினைச்சொடுக்கவும்.
உலகப்புத்தகத் தின விழா
இன்று உலகப்புத்தகத் தினவிழா 2025, நம் பள்ளி குமரசாமி நினைவு நூலகத்தில் நடைபெறுகிறது. ஆசிரியர், மாணவர்கள் தங்கள் படைப்புகளை (எழுத்து, காணொல...

-
காவேரி வாசிப்பு இயக்க நூல்கள் வணக்கம். எங்கள் பள்ளியில் கடந்து மூன்று ஆண்டுகளாகச் செயல்படும் இளம் வாசகர் வட்டம், காவேரி வாசிப்பு இயக்கத்தி...
-
இளம் வாசகர் வட்டத்தின் எழுத்தாளரான ஸ்ரீகாயத்ரியின் (சா.ஹரிணி) முதல் சிறுகதைத்தொகுப்பு இது. இக்கதைகள் யாவும் அவருடைய அனுபவத்திலிருந்து எழுதப்...
-
PARROT HOUSE - SRI GAYATHRI கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேனிலைப்பள்ளியில் படிக்கும், இளம் வாசகர் வட்டம் மற்றும் காவேரி வாசிப்பு இயக்க எழுத...